Pages

Wednesday, 26 March 2014

பெரம்பலூரில் ரயில் பாதை, மருத்துவக்கல்லூரி அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்டவை அமைத்துத் தரப்படும் என்று ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி அளித்து பேசினார்.


ரயில் பாதை, மருத்துவக்கல்லூரி அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்டவை அமைத்துத் தரப்படும் என்று ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி அளித்து பேசினார்.
பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி ஆலோ சனைக் கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது : இந்தியாவில் நல்லாட்சி மலர்ந்திட வழியில்லையே எனத் தவித்தபோது மோடி  கிடைத்துள்ளார். மோடி நாட்டுக்கான தலைவராக உருவாக்கப்பட்டவரல்ல. தானாகவே உருவானத் தலைவர்.
இப்பகுதி மக்களுக்காக பல்வேறு திரு மண நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்துள்ளோம். மருத் துவ உதவிகளை செய்து கொடுத்துள்ளோம்.  பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என குரல் கொடுக்கும் இயக்கமாக ஐஜேகே விளங்கி வருகிறது. என்னைத் தேர்ந்தெடுத்தால் உங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன்.

பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு செல்லும் புதிய ரயில்பாதை அமைத்துத் தருகிறேன். டெல்லியில் உண்ணாவிதரம் இருந்தாவது ரயில்வே துறை அமைச்சரிடம் போராடி ரயில்பாதை அமைத்துத் தருகிறேன்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி விரைந்து தொடங்க ஏற்பாடு செய்கிறேன். அரசு மகளிர் கலைக்கல்லூரியை பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்குவேன் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் சந்திரசேகர், தேமுதிக மாவட்ட செயலாளர் துரைகாமராஜ், ஒன்றிய செயலாளர் வாசுரவி, பாமக மாவட்ட செயலாளர் செந்தில், கண்ணபிரான், மதிமுக மாவட்ட செயலாளர் துரைராஜ், ஜெயசீலன் மற்றும் ஐஜேகே கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




Friday, 21 March 2014

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரி வேந்தர் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்

பா.. கூட்டணியில்  பாரி வேந்தர் போட்டி

பா.. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில்  தலைவர் பாரி வேந்தர் போட்டியிடுகின்றார்.

சென்னை பா.. கூட்டணியில் இடம் பெற்றுயுள்ள இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இதன் தலைவர் பாரி வேந்தர் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் இதற்கான முடிவு கட்சி பொது குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது

Saturday, 15 March 2014

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அகில இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கூறினார்.

பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அகில இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கூறினார்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் போது, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வந்தார். அப்போது, காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் வேட்பாளர் ஆசைத்தம்பிக்கு வாக்குகள் கேட்டு தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் வாக்குகள் சேகரித்தார்.
இதற்கிடையில் முறையான அரசு அனுமதி பெறவில்லை என கூறி அதிகாரிகள் பாரிவேந்தர் செய்த பிரசாரத்திற்கு தடைவிதித்தனர். இது தொடர்பாக வேட்பாளர் ஆசைத்தம்பி உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு சம்பந்தமாக நேற்று இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தேவகோட்டை கோர்ட்டில் ஆஜராகி குற்றபத்திரிகை நகலை பெற்று கொண்டார். இருநபர் ஜாமீனிலும் வந்தார். இவருக்காக வக்கீல் ராஜபாண்டி ஆஜரானார்.
பின்னர் பாரிவேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எங்களது கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கொள்கை அளவில் ஒத்துப்போவதால் நாங்கள் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தோம். 42 சட்டமன்ற தொகுதிகளில் வாய்ப்புள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்கும்படி வற்புறுத்தினோம். பின்னர் 3 தொகுதிகளை கேட்டோம். அப்போது, நாங்கள் கேட்ட தொகுதிகளையே கூட்டணி கட்சிகளும் கேட்டதால் பாராளுமன்ற தேர்தலில் முதன்முறையாக, இப்போது போட்டியிடுகிறோம் என்பதால் ஒரு தொகுதியை பெற்றுக்கொண்டோம்.
பெரம்பலூர் தொகுதி எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் நான் (பாரிவேந்தர்) போட்டியிடுகிறேன். விரைவில் எங்கள் கட்சியின் சார்பில் அறிவிக்கப்படும். இந்திய அளவில் டெல்லியிலும், உத்தரபிரதேசத்திலும் போட்டியிடுகிறோம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்ததால் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. எனவே எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன், மாநில அமைப்பு செயலாளர் குழந்தைசாமி, மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி மற்றும் எஸ்.ஆர்.எம்.நிறுவன பொதுமேலாளர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.